இந்த வருடம் குறிப்பிட்ட அளவு மழை பொழியுமா: இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு?


தென்மேற்கு பருவ மழைக்காலத்தின் இரண்டாவது பகுதியில் பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிகிழமை தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்திருப்பதாவது:
2020-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது பாதியாக கருதப்படும் ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 2 மாதங்களில், ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவில் மழை பொழிய வாய்ப்புள்ளது. இது நீண்ட கால சராசரியில் 97 சதவீதமாகும். இந்தப் பருவத்தின் இரண்டாம் பாதியில் நாடு முழுவதும் மழைப்பொழிவு 104 சதவீதமாக இருக்கும்.
‘1961 முதல் 2010ஆம் ஆண்டு வரையிலும் நாடு முழுவதும் நீண்டகால சராசரி (எல்பிஏ) மழைப்பொழிவு 88 சென்டிமீட்டராக இருந்தது. இது தற்போது 96 முதல் 104 சதவீதமாக இருக்கும். அதேவேளையில் நாட்டின் அதிகாரப்பூா்வ மழைக்காலம் ஜூன் 1 முதல் செப்டம்பா் 30 வரை ஆகும் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.