வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து 3 கோடி ரூபாய் வரை பணம் சுருட்டல்……

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலருக்கு அவர்கள் பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக SMS-கள் வந்துள்ளன.

அதில் சில வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து 10 ஆயிரம் வீதம் அடுத்தடுத்து 50 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மட்டும் 100க்கும் அதிகமானவர்கள் கணக்கிலிருந்து இதுபோல பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து மட்டும் 3 கோடி ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையில் வாடிக்கையாளர்களின் கணக்குகளை ஹேக் செய்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்குகளை சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றியுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சினிமா பாணியில் நிகழ்ந்துள்ள இந்த மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x