இவர்களையும் விட்டு வைக்காத கொரோனா…

தீவிரமாக பரவும் கொரோனா நோயை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது என்றாலும் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 2லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் இருப்பினும் “டிஸ்சார்ஜ்”ஆகுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்