புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் நியமனம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை, முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் ராஜிவ் குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தார்.
முன்னதாக இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லாவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவரானதால், இம்மாத இறுதியுடன் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இடத்துக்கு ராஜிவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜிவ் குமார் 1984 ஜார்க்கண்ட் கேடரின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். பி.எஸ்.சி மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றுள்ள இவர், பொது கொள்கை மற்றும் நிலைத்தன்மையில் முதுகலையும் பெற்றவர்.
2017 செப்டம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை நிதிச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ராஜிவ். இதைத் தொடர்ந்து அவர் பணியாளர்கள், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள், அல்லது 65 வயது எது முந்தையதோ அது வரை ஆகும். ராஜிவ் குமாருக்கு தற்போது 60 வயதாகிறது. இன்னும் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார். தற்போது, தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் லாவாசாவைத் தவிர சுஷில் சந்திரா உள்ளிட்ட இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கொண்டுள்ளது.