தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்து வருகிறது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் அதில்
தமிழகத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். முககவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும், கொரோனா என்றாலே பீதியடையத் தேவையில்லை. ஆரம்ப கால அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான சோதனைகளை நடத்தி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து மீளமுடியும் என அவர் தெரிவித்தார்.