20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுவதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் சேலம் மாவட்டத்தில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, விருதுநகர் மாவட்டம் புதூர் பாண்டியாபுரம், மதுரை மாவட்டம் எலியார்பதி, திருச்சியில் சமயபுரம், பொன்னம்பலப்பட்டி உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x