“மக்கள் விரோத கொள்கையை பின்பற்றும் பாஜக அரசை முறியடிப்போம்” ஐயா நல்லக்கண்ணு உறுதி!!

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேசிய கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “விவசாயத்திற்கு இலவசம் மின்சாரம் ரத்து செய்யும் மின்சார கொள்கை, குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை , சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிடு வரைவு உள்ளிட்ட மக்கள் விரோதமானவற்றை ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது

கடந்த 5 மாதங்களில் அரசியல் அமைப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை பெறாமல் இவ்வாறு சட்டங்களை இயற்றவும் திருத்தவும் செய்தது மிகவும் ஆபத்தானது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி முறைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை முறியடிப்போம்” என அவர் பேசியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x