கொரோனாவால், சென்னையில் அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!

சென்னை மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 10-ல் இருந்து 36-ஆக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். எனவே சென்னையில் நாள்தோறும் 1000-க்கு மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது என மாநகராட்சி கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் தற்போது அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குப்பட்ட பகுதியில் ஏற்கனவே 10 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா வெகுவாக அதிகரித்து வருவதால் 36 தெருக்களுக்கு மட்டும் ‘சீல்’வைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x