ஆன்லைன் கிளாஸ் நேர கட்டுப்பாடு? புதிய அறிவிப்பு

ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. மேலும் நீண்ட நேரம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் அமர்வது காரணமாக, அவர்களுக்கு மன நலன் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாளொன்றுக்கு மாணவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் நடத்த வேண்டும். 1 முதல் 8 ம் வகுப்பு வரை, 45 நிமிடங்களுக்கு, 2 பாட வேளைகளை நடத்த வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை, 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகளும் நடத்த வேண்டும் என வழிகாட்டு விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x