கேரளத்தில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இலவசம்!!

கேரளத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மாநில முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை அறிவித்தார்.
கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறிய இடைவேளைக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரோனா தடுப்பூசிக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் இதுவே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய மாநிலமாக கேரளமும் இதனை அறிவித்துள்ளது.
பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசி பரிந்துரையில் இருப்பதாக மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.