திருப்பதி கோயில் ஊழியர்களுக்கு வேகமாக பரவும் கொரோனாவால் பீதி!

திருப்பதி கோயிலில், பணிபுரியும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல், ஏழுமலையான் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 12 ஆயிரமாக எகிறியது.

இந்நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என, 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தேவஸ்தானம் நடத்தி வரும், ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.
இதில், கொரோனா தொற்று எண்ணிக்கை, 50க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஊழியர்களின் நலன் கருதி, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த் குமார் தலைமையில், குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x