ஜாகிங் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அமெரிக்காவில் படுகொலை…

அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் மாகாணத்தில் வசித்து வந்தவர் சர்மிஸ்தா சென் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்,அங்கு அவர் பார்மசிஸ்டாக இருப்பதுடன் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.

தடகள வீராங்கனையாகவும் இருக்கும் சென், தினமும் காலையில் ஜாகிங் போகும் வழக்கம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, ஜாகிங் சென்ற அவரை காணவில்லை.  மேலும் காணாமல் போன அவர் பிணமாக லெகசி டிரைவ் பகுதியருகே கண்டெடுக்கப்பட்டார் .  அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் அவர் மரணம் அடைந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், பகாரி அபியோனா (வயது 29) என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னின் மறைவுக்கு, அவருடைய நண்பர்கள், அருகே வசிப்போர் மற்றும் அங்கு சென்ற வழி போக்கர்கள் என நூற்றுக்கணக்கானோர் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x