அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 395 மெடிக்கல் சீட் கிடைத்துள்ளது!!

நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மசோதா சமீபத்தில் அமல்படுத்தப்பட்டதால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த வருடம் மெடிக்கல் படிக்க சீட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டால் சமூகவாரி இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்பதும், பொது பிரிவினருக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும் குறிப்பிடத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை பெற ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் படித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 26 அரசு கல்லூரிகளில் உள்ள 3,650 எம்.பி.பி.எஸ் சீட்களில் 227 இடங்களும், 14 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,949 எம்.பி.பி.எஸ் சீட்களில் 77 இடங்களும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,760 இடங்களில் 91 இடங்களும் என மொத்தம் 395 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x