இந்தியாவில் அடுத்தாண்டு டி-20 உலகக் கோப்பை

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியாவில் நடத்துவது என்று ஐ.சி.சி., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழாவது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தியாவில், அக்டோபர் – நவம்பர் மாதங்களில், திட்டமிட்டபடி நடத்துவது என்றும், தள்ளி வைக்கப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

12-வது பெண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்தாண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நியூசிலாந்தில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால், இதற்கான தகுதிச்சுற்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்த உலகக் கோப்பை ​தொடரையும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி வரை தள்ளிவைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x