பிணைத் தொகை கேட்டு மிரட்டும் ரேன்சம்வேர் வைரஸ் ; செய்தி நிறுவனத்தை முடக்கியது!!

வைரஸ் தாக்குதலால் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப நிபுணர்கள் போராடி தகவல்களை மீட்டுள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பி.டி.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ‘ரேன்சம்வேர் வைரஸ்’ எனப்படும் இணையத் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ‘கம்ப்யூட்டர் சர்வர்’ எனப்படும் தகவல் தொகுப்பு இயந்திரத்துக்குள் நுழைந்து சேவைகளை முடக்குவர்.ரேன்சம் எனப்படும் பிணைத் தொகை கேட்டு மிரட்டுவர்.

அவ்வாறு பி.டி.ஐ.யின் சர்வருக்குள் நுழைந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு முடக்கினர். இதனால் பல்வேறு பத்திரிகைகள் ஊடகங்களுக்கு செய்தி பகிர்ந்து கொள்ளும் சேவை பாதிக்கப்பட்டது. நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் கடுமையாக போராடி நேற்று காலை 9:00 மணியளவில் முழுமையாக மீட்டனர். இதற்காக எந்த பிணைத் தொகையும் தரப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x