“அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் செயல்படும்” என தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் பஸ், ரயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் 1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு தளர்வினில் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதனிடையயே செப்டம்பர் 1ம் முதல் தமிழக அரசின் அனைத்து அலுவலங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.

கொரோனா காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலகங்கள் மட்டுமே தமிழகத்தில் இயங்கின. மற்ற அரசு அலுவலகங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 50% ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது தினமும் 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கி வருவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுமுறைகளை கணக்கில் கொண்டு தமிழகத்தில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் வரை வரும் சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகம் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x