“பாகிஸ்தான் கூட கொரோனாவை சிறப்பாக கையாண்டுள்ளது!” ராகுல்காந்தி விமர்சனம்!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10. 3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்பதை பா.ஜ., அரசின் மற்றொரு மகத்தான சாதனை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில், மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனக் குறிப்பிடப்பட்டது.
Another solid achievement by the BJP government.
Even Pakistan and Afghanistan handled Covid better than India. pic.twitter.com/C2kILrvWUG
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2020
இதனை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பா.ஜ.க., அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.