17 வயது சிறுவனை தாக்கிய மாணவர்கள் – ஒருவர் பலி..!

கேரளாவில் 17 வயது சிறுவனை கும்பலாக மாணவர்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினைக் கொண்டு போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சம்பவம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாக்கப்பட்ட மாணவர், சக மாணவர்களின் குடிபழக்கத்தை வீட்டில் தெரியபடுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த 7 பேரும் அந்த மாணவரைத் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் தாக்கிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறார் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 7 பேரும் சிறார் என்பதால் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து, பெற்றோர்களின் சொந்த ஜாமினில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் மனமுடைந்த நிபின் என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலையும் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து கேரள சிறார்கள் நல ஆணையம் போலீசாரிடம் விளக்கமும் கேட்டுள்ளனர். சக மாணவர்களின் இரக்கமற்ற இந்த செயல் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.