ராமர் கோயிலின், 2000 அடி ஆழத்தில் தாமிர தகடு என்பது வதந்தி!

ராமர் கோவிலுக்கான பூமி பூஜையின் போது, ராமரின் வரலாற்று குறிப்புகள் அடங்கிய தகவல்களை தாமிர தகட்டில் எழுதி, அதை 2,000 அடி ஆழத்தில் புதைக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாகின. எதிர்கால சந்ததியினர் ராமர் கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளும் விதமாகவும், எதிர்காலத்தில் இது குறித்து சர்ச்சை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், ராமர் கோவில் பற்றிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் புதைக்கப்பட்டு, பாதுகாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், இதை மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: “பூமி பூஜையின் போது, ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், ஒரு சிலரின் கற்பனை. இந்த விவகாரம் குறித்து, அறக்கட்டளை நிர்வாகிகள் ஒருபோதும் விவாதித்தது இல்லை. அது போன்ற திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. ” என்று தெரிவித்தார்.

guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
1
0
Would love your thoughts, please comment.x
()
x