அடுத்து வருடமாவது ஒலிம்பிக் நடக்குமா?

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி, ‘அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடக்குமா என அதிகாரப்பூர்வமாக எதுவும் குறிப்பிட முடியாது’ என கூறியுள்ளார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x