மொரோட்டோரியம் தற்காலிகமான தீர்வே: ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட அசாதாரண சூழலை சமாளிப்பதற்காக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
நாளிதழ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
ஊரடங்கினால் பலரது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, தற்காலிக தீர்வாகவே கடனுக்கான மாதத்தவணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறித்த தெளிவான தரவுகள் கிடைத்த பிறகே, பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.