முதியவர்களுக்கு பி.சிஜி தடுப்பு மருந்து – தமிழக அமைச்சர் தகவல்

கொரோனாவின் தீவர தன்மையை குறைக்க முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த பரிசோனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் பிசிஜி மருந்தை செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதியவர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய ஐசிஎம்ஆர் அனுமதி கேட்டது. ஐசிஎம்ஆரின் கோரிக்கையை ஏற்று உரிய அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சோதனை முயற்சியை ஐசிஎம்ஆர்- ன் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில்துவங்க உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பிசிஜி தடுப்பு மருந்து முதியவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.