மதுரையில் இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கியை பரிசாக கொடுத்து சரச்சையை சிக்கிய பாஜகவினர்!

மதுரையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவருக்கு பரிசாக துப்பாக்கி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி, நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு மண்டல தலைவரான தேவகிரி சால்கா என்பவர் துப்பாக்கியை பரிசாக வழங்கினார்.

தேவகிரி சால்கா மதுரை அய்யர் பங்களாவில் அரசு உரிமத்தோடு ஏர்கன் தயாரிப்பவர் என்றும், அதன் காரணமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வத்திற்கு அந்த ஏர்கன்னை நினைவு பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது .

பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்படும் நிலையில் , பாஜகவினர் சற்று வித்தியாசமாக ஏர்கன்னை பரிசாக கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பரிசாக வழங்கப்பட்ட துப்பாக்கி பாதரச குண்டுகள் வைத்து சுடக்கூடிய துப்பாக்கி எனவும் , உண்மையான துப்பாக்கி இல்லை எனவும் நிகழ்ச்சியை நடத்திய பாஜகவினர் தெரிவித்துள்ளனர் .

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x