நடிகை ரியாவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த மும்பை சிறப்பு நீதிமன்றம்!!

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் கைதான நடிகை ரியாவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கினை தள்ளுபடி செய்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடிகை ரியா, அவரது சகோதரருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் ஷோயிக், சுஷாந்தின் உதவி தீபேஷ் சாவந்த் மற்றும் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ரியா சக்ரபோர்த்தி வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரை செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்தி, சகோதரர் ஷோயிக் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ரியா தாக்கல் செய்த மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அதில் ரியா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, வழக்கினை மும்பை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x