ஓராண்டுக்குள்ளாக மாற்றப்பட்ட ராமநாதபுரம் எஸ்பி… எச்.ராஜாவை எதிர்த்தது தான் காரணமா?

ராமநாதபுரத்தில் இரு கும்பல் முன் விரோதத்தினால் வெட்டிக்கொண்டு சாக அதற்கு மதசாயம் பூசும் கீழ்தரமான வேலையில் இறங்கினார் பாஜகவின் எச்.ராஜா, அவர் கருத்துக்கு எதிராக டுவீட் போட்ட ராமநாதபுரம் எஸ்.பி., தற்போது தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் சில தினங்களுக்கு முன் இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞரை மற்றொரு கும்பல் வெட்டிக்கொன்றது. அதில் தொடர்புடைய சரவணன், காமாட்சி, லெப்ட் ஷேக் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். உடனே எச்.ராஜா இது முஸ்லிம் மதவெறியர்கள் செயல் என டுவீட் செய்து கலவரம் உண்டாக்க முயற்சித்தார்.

அவரது பொறுப்பற்ற, உள்நோக்கம் கொண்ட டுவீட்டின் நோக்கத்தை புரிந்துகொண்ட ராமநாதபுரம் எஸ்.பி., மாவட்ட காவல் துறையின் டுவிட்டர் பக்கத்தில், வசந்தம் நகரில் நடந்த கொலை முன் விரோதம் காரணமானது மத பிரச்னை இல்லை என்றார். இந்நிலையில் அவரை அங்கிருந்து சென்னை ரயில்வே எஸ்.பியாக மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பியாக இருந்த அவரை, கடந்த ஆண்டு நவம்பரில் தான் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக மாற்றினார்கள். ஓராண்டு கூட முடிவடையாத நிலையில் ஒரு மாவட்ட எஸ்.பியை திடீரென மாற்றியிருப்பதற்கான காரணம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எச்.ராஜா டுவீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தது தான் காரணமா என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x