மோடி பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய பலூன்கள் – வீடியோ..! பிஜேபி நிர்வாகிகள் மீது வழக்கு

சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவுக்காக கொண்டுவரப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர் பாடியில் பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்‌பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. பாடி சிவன் கோயில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றார். அப்போது பட்டாசு வெடித்ததில், முத்துராமனின் அருகே இருந்த 500க்கும் அதிகமான கேஸ் பலூன்கள் மீது தீப்பொறி விழுந்தது. இதில் அந்த பலூன்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.

இந்த விபத்தில் அருகில் நின்ற சிறுவர்கள் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

விசாரணையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்காக எந்த அனுமதியும் பெறாதது தெரியவந்தது. 144 தடை அமலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் ஆட்களை கூட்டியது, தீப்பற்றக்கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினர் முத்துராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேஸ் பலூன்களை பறக்கவிடுவதற்காக வழக்கமாக ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால், ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள் ‌பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே தற்போது ஏற்பட்ட விபத்தில் பலூன்களில் நிரப்பிய வாயு ஹீலியமா அல்லது ஹைட்ரஜனா என்ற கேள்வி எழுந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x