‘எந்த நேரத்துல சொத்து வரி கேக்குறீங்க?’ டிடிவி தினகரன் பாய்ச்சல்

சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 100 நாட்களை தாண்டி போடப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘மக்கள் படும் துயரத்தை கருத்தில் கொண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையிலாவது நீட்டிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.