கைலாசா நாட்டின் புதிய நாணயங்களை வெளியிட்டு அதகளம் செய்யும் நித்தியானந்தா!!

கைலாசா நாட்டின் கைலாஷியன் டாலர்களை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
பல்வேறு புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அவ்வப்போது யுடியூப் மூலம் பேசிவருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் கைலாசா என்ற தீவை விலைக்கு வாங்கி தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று ஐந்து வகையான தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என்று நித்தியானந்தா கூறியிருந்தார். அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ணா முத்ரா, புஷ்ப முத்ரா என்றும் பெயர் வைத்தார்.

இந்நிலையில், சமூகவலைதளத்தில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தா அறிமுகப்படுத்தியுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.