கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்ட மருத்துவர் தற்கொலை!

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த இளைஞர் மருத்துவமனை கட்டிட மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கண்ணன் (25) என்பவர் முதுநிலை எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று இரவு வரை இவர் கொரோனா வார்டில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவர் காலை 5 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து  தற்கொலை செய்துகொண்டார்.

பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும், பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர் சங்க தலைவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்கொலை குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x