தனி ஆளாக திருடர்களை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாராட்டி தள்ளும் நெட்டின்கள்!!

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வந்த திருடர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ரிஸ்க் எடுத்து அவர்களை தனி ஆளாக பிடித்து கைது செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அசால்டாக பைக்கில் வந்து நடந்து செல்லும் நபர்களின் கையில் இருக்கும் செல்போனை பறித்துச் செல்ல ஒரு கும்பலே செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் உள்ள பகுதி ஒன்றில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் திருட்டு பைக்கில் தப்பிக்க முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டிலின் ரமேஷ் அவர்களை துரத்திச் சென்று பிடித்துள்ளார். முதலில் ஒருவரை பிடிக்க, அவரை வைத்து 3 பேரை பிடித்து கைது செய்துள்ளார்.

அந்த திருடனின் கையில் ஆயுதம் உள்ளதா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் லாவகமாக அந்த திருடனை பைக்கில் இருந்து அப்படியே ஹெல்மெட்டை பிடித்து இழுத்து பிடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், “இது எந்த படத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட காட்சி இல்லை. ஆனால் நிஜ வாழ்க்கை ஹீரோ சப்-இன்ஸ்பெக்டர் தனி ஆளாக துரத்தி போன் திருடும் நபர் திருட்டு பைக்கில் சென்ற போது பிடித்துள்ளார். அதோடு 3 பேரை கைது செய்ததோடு, 11 திருட்டு செல்போன்களையும் கைப்பற்றியுள்ளார்.” என்று பதிவிட்டு அதோடு சிசிடிவி வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x