டிசம்பர் 21ல் வானைப் பாருங்கள்.. 397 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்..!

டிசம்பர் 21ஆம் தேதி மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது. சுமார் 397 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் தேபி பிரசாத் துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும். சனியும் கடைசியாக 1623ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதற்கு பிறகு, இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வருகிற நிகழ்வு 21ம் தேதி நடக்க உள்ளது.

அப்போது, 2 கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களை போல் தோற்றமளிக்கும். இது, கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு என்று அழைக்கப்படுகிறது’ எனக் கூறியுள்ளார். 

டிசம்பர் 21ஆம் தேதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின் நம்மால் பார்க்கமுடியும். இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x