யாரைக்காக்க பாராளுமன்றம்? கமல் ட்வீட்

971 கோடி ரூபாய் செலவில் புதிய பாரளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல்லை பிரதம் மோடி டிசம்பர் 10 அன்று நாட்டினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில், ” சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே” எனப் பதிவிட்டுள்ளார்.