சானிடசரை ஊற்றி காதலியை கொழுத்திய சைக்கோ; கடன் தர மறுத்ததால் விபரீதம்

பஞ்சாம் மாநிலம், சண்டிகரில் வசிக்கும் 22 வயது இளம்பெண், அப்பகுதியில் வசிக்கும் நரேஷ் என்பவனை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலன் நரேஷ் தன் காதலியிடம் 2 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளான். ஆனால், அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கைவிரித்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன் காதலியின் முகத்தில், கையை சுத்தப்படுத்த உதவும், சானிடைசரை ஊற்றி, லைட்டரைப் பயன்படுத்தி நெருப்பு வைத்துள்ளான். சானிடைசரில் இருக்கும் எரிசாராயம் காரணமாக காதலியின் முகம் பற்றி எரிந்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், ஷில்லாங் என்ற ஊரிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் சண்டிகருக்கு குடிபெயர்ந்ததாகவும், அதன்பின் சைக்கோ நரேஷுடன் காதல் வயப்பட்டு, ஒன்றாக வாழத் தொடங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட இளம்பெண், காதலன் நரேஷ் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார். மேலும் நரேஷ் இதற்கு முன்பே அடிக்கடி பணத்திற்காக தன்னைத் தாக்கியதாக அவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். சைக்கோ நரேஷ் கைது செய்யப்பட்டான்.