தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதியன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்கிறார்.