ஐந்து பென்ஸ் கார்களுடன் சென்ற கண்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்.. சாதுர்யமாக பிடித்த போலீஸார்..!

5 பென்ஸ் கார்களுடன் சென்ற கண்டெய்னர் லாரியை கடத்திய கும்பலை காவல்துறையினர் விரட்டி பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் ஹரியானா மாநிலத்தில் ஐந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை ஏற்றிக் கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை கொள்ளை கும்பல் ஒன்று துப்பாக்கியை காட்டி மறித்து, லாரி ஓட்டுநரை கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே இருந்த கார்களுடன் கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சாலையில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக அங்கிருந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து லாரியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது நுஜ் மாவட்டத்திலுள்ள நாய் நகர் என்னுமிடத்தில் வசிக்கக்கூடிய ரஸாக் என்பவர் தான் கும்பலின் தலைவன் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டு உள்ளது. அதனையடுத்து  கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற கும்பலை விரட்டிப் பிடித்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். லாரியில் இருந்த ஐந்து கார்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கடத்தல் தொடர்பாக கொள்ளை கும்பலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x