வானிலை மையத்திடமிருந்து நேரடியாக தகவல் அளிக்கும் ‘மவுசம்’ செயலி!
இந்திய வானிலை மையம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் இணைந்து துல்லியமான வானிலை அறிக்கையை மக்கள் நேரடியாக பெறும் வகையில் மவுசம் எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் மற்றும் பிளே ஸ்டோர்களில் கிடைக்கும் இச்செயலியில் 200 நகரங்களின் தினசரி வானிலை அறிக்கை 8 முறை புதுபிக்கப்படுகிறது.வானிலை முன்னறிவிப்பை அடுத்த 7 நாட்கள் என்ற ரீதியில் வழங்கும்.
கடந்த 24 மணிநேர வானிலை தகவல்களும் செயலியில் கிடைக்கும். மோசமான வானிலை குறித்து எச்சரிக்கும் வகையில் ஒரு நாளைக்கு இருமுறை என அடுத்த 5 நாட்களுக்கு சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அலெர்ட்களை காட்டும் வசதியும் இதில் உள்ளது.