மீண்டும் யார் பேச்சையும் கேட்காத வட கொரிய அதிபர்?

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்ததால் அந்த நாட்டின் மீது, ஐநா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது, சோதனை திட்டங்களுக்கு நிதி உதவியை கட்டுப்படுத்தும் வகையில் வட கொரியா மீது பொருளாதார தடைகளை தொடர்ந்து வருகிறது.
வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதியும் டிரம்ப்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் மூன்று முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன எனினும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சோதனை நிறுத்தி வைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது, வடகொரியா மீது பொருளாதார தடையை கவனிக்கும் ஐ நா பாதுகாப்புக் கவுன்சில் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கையின்படி இது தெரிந்துள்ளது. ஏவுகணைகளில் பொருந்தும் சிறிய வகை அணு ஆயுதக் கருவிகளை வட கொரியா தயார் செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.