தமிழகத்தில் பொது முடக்கம் தொடருமா? முதல்வர் இன்று ஆலோசனை !

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியவுள்ள சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

அதன்படி இன்று காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர், பிற்பகலில், மருத்துவக் குழுவினருடன் ஆலோசிக்கிறார். இவர்களின் ஆலோசனையின் பேரில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இ பாஸ் முறையை ரத்து செய்யுமாறு மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகத்தில் இ பாஸ் முறை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கொரோனா பரவல் காரணமாக ‌நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொ‌துமுடக்கத்திற்கான தளர்வுகள் ஜூலை மாதம் முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அன்லாக் 4.0 விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பும் மக்கள் மனதில் நிலவுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x