தமிழக பா.ஜ. நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்கு; இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை

தமிழக பா.ஜ. சார்பில் நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருத்தணி துவங்கி திருச்செந்துார் வரை நாளை முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ. தலைவர் முருகன் அறிவித்துள்ளார். இதற்கு தடை கோரி செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களில் ‘வைரஸ் தொற்று காரணமாக மத நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தும் போது பொது மக்கள் அதிகம் பேர் கூடுவர். அதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு எடுத்து வரும் முயற்சிகளும் வீணாகும்’ என கூறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் இன்று(நவ.,5) விசாரணைக்கு வருகின்றன