கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரிக்கு தண்டனை!

ஊரடங்கு உத்தரவை மீறி கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்த நடிகர் விமல், சூரிக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு வர பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்து மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் வைரலானது.
இவ்விஷயம் கொடைக்கானல் வனத்துறையினர் கவனத்திற்கு வந்தது. அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த 17-ம் ததி ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் அங்கு மீன்பிடித்துள்ளது உறுதியானது. தடையை மீறி பயணித்த விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.