அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு படையினரின் கார்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது திடீரென சாலையின் குறுக்கே பசு ஒன்று வந்துள்ளது. இதன் மீது மோதமால் இருப்பதற்காக பாதுகாப்பு படையினர் தங்களது காரில் திடீரென பிரேக் போட்டுள்ளனர். முன்னாள் சென்று பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதில் சந்திரபாபு நாயுடு வந்த கார் உள்பட 8 கார்களும் பலத்த சேதமடைந்தன.

இதனை அடுத்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்துமின்றி அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக செய்திகள் வெளிவந்ததுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதிக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x