கொரோனாவால் மருத்துவமனை சென்ற வங்கி மேலாளர் வீட்டில் குறி வைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள்!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்றவர்களின் பூட்டப்பட்ட வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கார்த்திகேயபுரம், இரண்டாவது குறுக்கு தெருவில் ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் நவநீத கண்ணன் வசித்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி கண்ணன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 5ஆம் தேதி முதல் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகைகள், வைரக்கல் மோதிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டு நிகழ்விடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x