கருணாநிதி பெயரில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்- முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜூலை 30க்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் பெற முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதினார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நீண்ட இழுபறிக்குப் பின்னர் மத்திய அரசு இதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்புதலை அளித்தது.

அதன்படி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இருப்பினும் இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பை மீறி புதுச்சேரி பேரவையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் பல திட்டங்களை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

‘புதுச்சேரியிலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் புத்தாக்கம் செய்யப்படும். புதுச்சேரி அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும். அந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் தரப்படும்.’ என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x