வியட்நாம் சுற்றுலா தளத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்!!!

வியட்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான டா நாங் பகுதியில் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட உள்ளனர்.

இதுகுறித்து வியட்நாம் அரசுத் தரப்பில், “வியட்நாமின் பிரபல சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று டா நாங். இங்கு கடந்த சனிக்கிழமை சுற்றுலாப் பயணி ஒருவருக்குக் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்குக் தொற்று அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் உட்பட 80,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர். நான்கு நாட்களில் அவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் கடந்த நூறு நாட்களாக யாருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x