கொரோனாவை தொடர்ந்து, அடுத்த ஆபத்து: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!

கொரோனா பெருந்தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை, உருமாற்றம் என அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்து உலகம் முழுவதும் கதிகலங்கவைத்து வருகிறது. இந்த வைரசின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், தற்போது புதிய நுண்ணியிரியால் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது.
அதாவது, முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில், மூளையை உண்ணும் அமீபா நுண்ணுயிரியால் தாக்கப்பட்டு, 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து இதுமட்டுமல்லாமல் நகரத்தின் பிற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
தண்ணீர் மூலம் பரவும் இந்த நுண்ணியிரி தொற்று மனிதர்களின் மூக்குவழியாக மூளையை அடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கோமா நிலை, பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு ஏற்படுத்தி இறுதியில் மரணம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் பல இடங்களில் இந்த கொடிய வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொடிய வைரஸின் பாதிப்புகள் இப்போது அதிக அளவில் பரவி, மத்திய மேற்கு மாநிலங்களை நோக்கி நகர்கின்றன என்ற செய்தி உலகம் முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.