கன்னியாகுமரி இடைதேர்தலில் போட்டியிட மறைந்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பம்!

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் உடல்நலக் குறைவால் கடந்த 28ம் தேதி மாலை காலமானார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பேரிழப்பாகவே கருதப்படுகிறது. வசந்தகுமார் மாற்றுக்கட்சியினரை கூட மதித்துப் போற்றக்கூடிய ஒருவராகத் திகழ்ந்தவர். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வசந்தன்கோ நிர்வாகத்தை முழுமையாக கவனித்து வருகிறார். மூத்த மகன் விஜய் வசந்த் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, நிறுவன கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.

தற்போது வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு வர வேண்டுமென, வசந்தகுமாரின் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விஜய் வசந்துக்கு காங்கிரஸ் சீட்டு தர வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்பி மறைவை அடுத்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு குறித்து விஜய் வசந்த் கூறியதாவது, “அரசியல் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. காங்கிரஸ் உறுப்பினராக கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார். எனவே, அரசியலில் இறங்கி கன்னியாகுமரி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x