கண்தானம் செய்வதாக அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தேசிய கண் தான தினம் நாளை (ஆகஸ்ட் 8) கடைபிடிப்பதையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தானத்தில் சிறந்த தானம், கண்தானம் என்பார்கள். ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரைக்கும் இரண்டு வாரங்கள் கண் தான தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண்தான தினம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தலைமைக் செயலகத்தில் இன்று தேசிய கண் தானம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். அப்போது தனது கண்களை தானம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் டிவிட்டர் பக்கத்தில், “தமிழக தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண் தானத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் அதற்கான ஒப்புதல் படிவத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கையெழுத்திட்டார்.” என்று பதிவிட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x