தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடையை எதிர்த்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்.
இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து உள்நாட்டு நேரப்படி காலை 10.45 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.