ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டு, கடையை சூறையாடிய போதை ஆசாமிகள் கைது!!

அரியாங்குப்பத்தில் உள்ள பேக்கரியில் ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் இல்லை என்று கூறியதால் கஞ்சா போதையில் கடையை சூறையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் பைபாஸ் பகுதியில் பேக்கிரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்றிரவு வந்த 3 பேர், ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர். கடை ஊழியர்கள் ஒட்டகம் பால் இல்லை என்று தெரிவித்ததால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அம்மூவரும் கடையை சூறையாடினர். அவர்களை தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கினர். பதிலுக்கு கடை ஊழியர்கள் தாக்க முயன்றபோது 3 பேரும் தப்பிச்சென்றனர். புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகியோர் கஞ்சா போதையில் கடையை சூறையாடி இருப்பது தெரிய வந்தது. முருங்கப்பாக்கம் பகுதியில் இருந்த 3 பேரையும் அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x