இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேலத்தின் சின்னம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில், நடராஜன் நடந்த ஐ.பி.எல் சீசினில் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம் பிடித்தார். அதாவது,வருண் சக்கரவர்த்திக்கு காயம் காரணமாக விலகியதால் நடராஜனுக்கு டி-20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன். அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x